காமெடி நடிகர்கள் சிங்கமுத்து, மனோபாலா மீது நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார்!

 

காமெடி நடிகர்கள் சிங்கமுத்து, மனோபாலா மீது நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார்!

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரது காமெடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவ்வாறு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் சமீப காலமாக படங்களில் நடிக்காமல் விளக்கியிருக்கிறார். இருப்பினும் மீம்ஸ்களின் மூலமாகவோ அல்லது சோஷியல் மீடியாக்கள் மூலமாகவோ அடிக்கடி இவரது காமெடி ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

காமெடி நடிகர்கள் சிங்கமுத்து, மனோபாலா மீது நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார்!

நடிகர் வடிவேலுவின் நெருங்கிய நண்பராக இருந்தவர் காமெடி நடிகர் சிங்கமுத்து. இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் தற்போது பேசிக் கொள்வதில்லை. அதுமட்டுமில்லாமல் இரண்டு பேருக்கும் இடையே நில மோசடி வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சிங்கமுத்து, மனோபாலா நடத்தி வரும் யூடியூப் சேனலில் தன்னை பற்றி தவறாக பேசியிருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் வடிவேலு புகார் அளித்துள்ளார்.

காமெடி நடிகர்கள் சிங்கமுத்து, மனோபாலா மீது நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார்!

அந்த புகாரில், யூ டியூபில் நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற சேனலில் சிங்கமுத்து பேட்டியளித்ததாகவும், அப்போது தன்னை பற்றி மனோபாலா சிங்கமுத்துவிடம் சில கேள்விகள் கேட்டதாகவும் அதற்கு அவர் தரக்குறைவாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவை பல நடிகர்கள் இருக்கும் SIAA லைப் மெம்பர் ஷிப் என்னும் வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிர்ந்துள்ளதாகவும் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.