சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் இயங்காது – சென்னை மாநகராட்சி

 

சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் இயங்காது – சென்னை மாநகராட்சி

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் இயங்காது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் இயங்காது – சென்னை மாநகராட்சி

தமிழகத்தில் நேற்று 2,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 25,35,402 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 29 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 33,724 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கோயம்புத்தூரில் 220 , சேலத்தில் 142 பேருக்கும், ஈரோட்டில் 128 பேருக்கும், சென்னையில் 150 பேருக்கும் தினசரி கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்,இன்று தடுப்பூசி முகாம்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி வந்த பிறகு முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மத்திய அரசிடம் தடுப்பூசிகளை கேட்டுள்ள நிலையில் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைத்த பிறகு இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது