திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவு; தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 3 ஆக உயர்வு!

 

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவு; தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 3 ஆக உயர்வு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை மணிக்கு காலமானார். அவருக்கு வயது 62. மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2001 இல் தி.நகரிலும் 2011 மற்றும் 16 இல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கொரோனா நேரத்திலும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது மறைவு திமுகவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவு; தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 3 ஆக உயர்வு!

இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்ததால், தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 3 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர், நியமன உறுப்பரையும் சேர்த்து மொத்தம் 235 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காத்தவராயன் ( குடியாத்தம்) , கே.பி.பி.சாமி ( திருவொற்றியூர்) மரணமடைந்ததை அடுத்து சட்டமன்றத்தில் 2 இடங்கள் காலியானது. தற்போது ஜெ. அன்பழகன் மரணமடைந்ததன் மூலம் காலி இடங்கள் 3 ஆக அதிகரித்துள்ளது.

அதனால் தமிழக சட்டப்பேரவையில் தற்போது அதிமுக – 124, திமுக – 97, காங்கிரஸ் – 7 ,இந்திய யூனியன் முஸ்லீன் லீக் – 1, சுயேட்சை – 1, நியமன உறுப்பினர் – 1 , சபாநாயகர் – 1, காலி இடம் – 3 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் திமுக எம்எல்ஏ ராஜாமணி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.