“நீ இல்லாம நைட்ல தூக்கம் வரலே….” -மனைவியை அனுப்பாத மாமியார் வீட்டுக்கு நேர்ந்த நிலை .

 

“நீ இல்லாம நைட்ல தூக்கம் வரலே….” -மனைவியை அனுப்பாத மாமியார் வீட்டுக்கு நேர்ந்த நிலை .

குழந்தை பிறந்த பிறகு குடும்பம் நடத்த வராத மனைவியால் கோபமுற்ற கணவன் மாமியார் வீட்டை தீ வைத்து கொளுத்தினார் .

“நீ இல்லாம நைட்ல தூக்கம் வரலே….” -மனைவியை அனுப்பாத மாமியார் வீட்டுக்கு நேர்ந்த நிலை .

 உத்தரபிரதேசத்தின் கான்பூரின் ரட்டுபுர்வா பகுதியில் முகேஷ்குமார் என்ற ஓட்டுநர் வசித்து வருகிறார் .இவர் ஹார்டோய் மாவட்டத்தில் உள்ள இட்டாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார் .அவர் அதே ஊரை சேர்ந்த மனிஷா என்ற பெண்ணை கடந்த ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார் .இருவருக்கும் குடும்பம் நடத்த வருமானம் போறாததால் கல்யாணம் ஆன நாள் முதல் பிரச்சினைகள்  இருந்து வந்தது .இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமானார் .அதன் காரணமாக அவர் தன்னுடைய தாயார் வீட்டுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள சென்றார் .

கடந்த மாதம் மனிஷாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் .அவரின் கணவர் முகேஷ் தன்னுடைய மனைவியை அழைக்க அவரின் வீட்டுக்கு சென்றார் .ஆனால் அப்போது அவரின் மனைவியின் தாயார் மற்றும் தந்தை ஆகியோர் அவரிடம் தங்களின் மகளை அனுப்ப முடியாது என்று கூறி விட்டார்கள் .பிறகு முகேஷ் அவரின் மனைவியிடம் நீ இல்லாமல் நான் நிம்மதியா தூங்க முடியவில்லை குடும்பம் நடத்தலாம் வா” என்று கூப்பிட்டார் .ஆனால் அதை  கேட்ட மனிஷாவும் ,தான் குடும்பம் நடத்த வர முடிவது என்று கூறிவிட்டார் .இதனால் கடும் கோபமுற்ற முகேஷ்,தன்  மாமியாரின் வீட்டை  பெட்ரோல் ஊற்றி  தீ வைத்து கொளுத்தினார்

இதனால் அவரின் மாமியார் வீட்டை  தீப்பிழம்புகள் சூழ்ந்தது .இந்த தீயில் , மனிஷா, அவரது தந்தை ஹிராலால், தாய் சிவ குமாரி, சகோதரர் மனிஷ் மற்றும் சகோதரிகள் உமா, ராதா மற்றும் வந்தனா உள்ளிட்ட ஏழு பேர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானார்கள். இதில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது .பிறகு இந்த சம்பவத்துக்கு காரணமான முகேஷ் குமாரை போலீசார் கைது செய்தார்கள் .

“நீ இல்லாம நைட்ல தூக்கம் வரலே….” -மனைவியை அனுப்பாத மாமியார் வீட்டுக்கு நேர்ந்த நிலை .