காதலித்த பெண் -எதிர்த்த தாய் -அடுத்து காதலனோடு சேர்ந்து செய்த அதிர வைக்கும் செயல்

 

காதலித்த பெண் -எதிர்த்த தாய் -அடுத்து காதலனோடு சேர்ந்து செய்த அதிர வைக்கும் செயல்


காதலை ஏற்க மறுத்த தாயை அவரின் மகளே காதலனுடன் சேர்ந்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது

காதலித்த பெண் -எதிர்த்த தாய் -அடுத்து காதலனோடு சேர்ந்து செய்த அதிர வைக்கும் செயல்


ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் 22 வயதான பெண் சவரவள்ளி ரூபாஸ்ரி பி பார்ம் படிக்கும் மாணவியாவார் அவர் தன்னுடைய தாயார் லட்சுமியுடன் விஜயநகரம் மாவட்டத்தின் சவரவள்ளி கிராமத்தில் வசித்து வந்தார் .
அப்போது அவர் வருண் சாய் என்பவரை காதலித்து வந்தார் .இந்நிலையில் இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் தாய்க்கு தெரிந்து விட்டது .அதனால் அவர் அவர்களின் காதலின் ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் .
அதனால் அந்த தாய் லட்சுமி மீது அந்த பெண் கடும் கோபத்தில் இருந்தார் .இந்த விஷயத்தை அவரின் காதலனிடம் அவர் கூறினார் .பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து அவர்களின் காதலை எதிர்க்கும் அந்த தாயை கொல்ல முடிவெடுத்தனர் .
அதன் படி கடந்த மே 6ம் தேதி இரவு இருவரும் சேர்ந்து அந்த தாய் லட்சுமியின் கழுத்தையும் மூக்கையும் நெரித்து மூச்சு திணற செய்து கொன்றுவிட்டனர் .பின்னர் அவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் அவர்களின் தாய் திடீரென மூச்சு திணறி இறந்து விட்டதாக பொய் சொன்னார்கள் .ஆனால் அக்கம்பக்கத்தினர் அவரை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கி சென்றனர் .அங்கு அவரை பார்த்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர் .பின்னர் போலீசார் வீசாரணை நடத்தியதில் பெற்ற மகளே தாயை கொன்ற உண்மை வெளியானது .பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர் .

காதலித்த பெண் -எதிர்த்த தாய் -அடுத்து காதலனோடு சேர்ந்து செய்த அதிர வைக்கும் செயல்