முஸ்லீம் காதலன் – இந்து காதலி -மதத்தின் பெயரால் பெண்ணுக்கு நடந்த கொடுமை

 

முஸ்லீம் காதலன் – இந்து காதலி -மதத்தின் பெயரால் பெண்ணுக்கு   நடந்த கொடுமை


ஒரு இந்து பெண்ணிடம் பொய் சொல்லி காதலித்து,பின் அவரை கடத்தி சென்று இஸ்லாம் மதம் மாற சொல்லி கொடுமை செய்த காதலரை கைது செய்தனர்.

முஸ்லீம் காதலன் – இந்து காதலி -மதத்தின் பெயரால் பெண்ணுக்கு   நடந்த கொடுமை


டெல்லியின் உஸ்மன்பூர் பகுதியைச் சேர்ந்த அப்சல் என்ற முஸ்லீம் வாலிபர் ஒரு இந்து மதத்தினை சேர்ந்த 16 வயதான பெண்ணை காதலித்தார் .அப்போது அவர் அந்த பெண்ணிடம் அவரது பெயர் அர்மன் கோஹ்லி என்று கூறி,தன்னை ஒரு இந்து என்றும் பொய் சொன்னார் .அதனால் அந்த பெண் அவரை காதலிக்க தொடங்கினார் .அதன் பின் அவர்களின் காதல் சமூக ஊடகத்திலும் ,நேரிலும் வளர்ந்து வந்தது .
இதற்கிடையே அந்த அப்சல் அந்த பெண்ணை டெல்லியில் உள்ள அவரின் உறவினர் வீட்டுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.அப்போது அந்த வாலிபரிடம் அந்த பெண் எதற்காக கூப்பிடுகிறாய் என்று கேட்டபோது ,அதற்கு அவர் நாம் அங்கு சென்று கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார் .அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அவரோடு கடந்த ஞாயிற்று கிழமையன்று சென்று விட்டார் .அதன் பிறகு அந்த பெண்ணை இரண்டு நாட்களாக காணாத அவரின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி பார்த்தார்கள் .
அப்போது அந்த அப்சல் அந்த பெண்ணை அவரின் உறவினர் வீட்டில் அடைத்து வைத்து ,முஸ்லீம் மதத்திற்கு மாற சொல்லி அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளதை கண்டறிந்தார்கள் .அதன் பிறகு போலீசார் அந்த அப்சலின் வீட்டினை முற்றுகையிட்டு அந்த பெண்ணை மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர் .அதன் பிறகு அப்சலை கைது செய்தனர் .

முஸ்லீம் காதலன் – இந்து காதலி -மதத்தின் பெயரால் பெண்ணுக்கு   நடந்த கொடுமை