உறவினில் எழுந்த சந்தேகம் -இரவினில் எழுந்த கணவன் -குடும்பத்திற்குள் நடந்த கொடுமை.

 

உறவினில் எழுந்த சந்தேகம் -இரவினில் எழுந்த கணவன் -குடும்பத்திற்குள் நடந்த கொடுமை.

ஒருவர் தனது மனைவியையும் இரண்டு மகள்களையும் வெளியாட்களுடன் சட்டவிரோத உறவைக் கொண்டிருந்தார்கள்  என்ற சந்தேகத்தின் பேரில் சுத்தியலால் அடித்து  கொன்றுள்ளார்

உறவினில் எழுந்த சந்தேகம் -இரவினில் எழுந்த கணவன் -குடும்பத்திற்குள் நடந்த கொடுமை.

உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள ஷிகார்பூர் காவல் நிலைய பகுதியில் உள்ள அம்பேத்கர்நகர் காலனியில் 60 வயதான நபர் தனது மூன்று  டீனேஜ் மகளோடும் ,மனைவியோடும் வசித்து வந்தார் .அவரின் ஒரு மகன் திருமணமாகி மனைவியை பிரிந்து தனியாக வசிக்கிறார் .

இந்நிலையில் அந்த 60 வயதான தந்தைக்கு தன்னுடைய மனைவி மற்றும் மகள்களின் நடத்தையில் திடீரென சந்தேகம் வந்துள்ளது .

அதனால் அவர் அடிக்கடி குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களோடு சண்டை போட்டு வந்துள்ளார் .அப்போதெல்லாம் அவர்களின் தகராறு பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை .ஆனால் கடந்த வாரம் அந்த குடும்ப தலைவர் மீண்டும் அந்த குடும்பத்திலிருக்கும் மனைவி மற்றும் மகள்களின் நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டை போட்டுள்ளார் .அதன் பிறகு அனைவரும் தூங்க சென்று விட்டார்கள் .அதன் பிறகு நள்ளிரவில் எழுந்த அந்த கணவர் ஒரு சுத்தியலை எடுத்து அந்த குடும்பத்திலிருக்கும் மனைவி மற்றும் மூன்று மகள்களை தாக்கினார் .இதில் அவரின் மனைவி மற்றும் இரண்டு டீனேஜ் மகள்கள் இறந்தார்கள் .மற்றொரு 18 வயதான மகள் இந்த தாக்குதலில் காயம் ஏற்ப்பட்டு மீரட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .இந்த கொலை பற்றி தகவலறிந்த போலீசார் வழக்கு பதிந்து கொலை செய்த 60 வயதான கணவரை தேடி வருகின்றனர் .

உறவினில் எழுந்த சந்தேகம் -இரவினில் எழுந்த கணவன் -குடும்பத்திற்குள் நடந்த கொடுமை.