கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடிக்கு முன்பே தெரியும்.. மத்திய அமைச்சர் பேச்சால் புது சர்ச்சை

 

கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடிக்கு முன்பே தெரியும்.. மத்திய அமைச்சர் பேச்சால் புது சர்ச்சை

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவை கொண்டாடும் விதமாக சவுராஷ்டிரா மற்றும் மத்திய குஜராத்தில் மெய்நிகர் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு வரை கொரோனா வைரஸ் பெயரை யாரும் கேட்டு இருக்கமாட்டார்கள்.

கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடிக்கு முன்பே தெரியும்.. மத்திய அமைச்சர் பேச்சால் புது சர்ச்சை

நம் நாட்டில் கடந்த ஜனவரி 30ம் தேதி கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அதற்கு சுமார் ஒரு மாதத்துக்கு முன்பாகவே ஒவ்வொரு அமைச்சரவை கூட்டத்தின்போதும் எங்களிடம், கொரோனா வைரஸ் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் மற்றும் அது உலகம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாகவும் பிரதமர் மோடி கூறி வந்தார்.

கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடிக்கு முன்பே தெரியும்.. மத்திய அமைச்சர் பேச்சால் புது சர்ச்சை

கொரோனா வைரஸை சமாளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படியும் மற்றும் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அவர் எங்களிடம் கேட்டுக்கொண்டார். இதுதான் தனது மக்களை நேசிக்கும் ஒரு தலைமையின் அடையாளம். இவ்வாறு அவர் பேசினார். கொரோனா வைரஸ் குறித்து முன்பே தெரிந்தும் நாடு தழுவிய லாக்டவுனை ஏன் மோடி மிகவும் காலதாமதமாக நடைமுறைப்படுத்தினார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.