அக்டோபரில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு… செப்டம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்பு.. கர்நாடக அரசு தகவல்

 

அக்டோபரில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு… செப்டம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்பு.. கர்நாடக அரசு தகவல்

கர்நாடக அரசு லாக்டவுன் விதிமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி இயல்பு வாழக்கை திரும்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மீண்டும் தொடங்க அம்மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது கல்லூரிகளை அக்டோபரில் மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில உயர் கல்வி துறை அமைச்சருமான சி.என். அஷ்வத்நாராயண் தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு… செப்டம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்பு.. கர்நாடக அரசு தகவல்
சி.என்.அஷ்வத்நாராயணன்

சி.என். அஷ்வத்நாராயண் இது தொடர்பாக டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்களில், டிகிரி (பட்டபடிப்பு) கல்லூரிகள் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் மீண்டும் செயல்பட தொடங்கும். அதுவரை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும். செப்டம்பரில் சில டிகிரி தேர்வுகளையும் நடத்த வேண்டியது இருக்கும் என்பதால் அடுத்த மாதம் முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளிலும் ஆன்லைன் ஊடகத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

அக்டோபரில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு… செப்டம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்பு.. கர்நாடக அரசு தகவல்
தேர்வு எழுதும் மாணவர்கள் (கோப்பு படம்)

கல்லூரிகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து விதிமுறைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், மாநில அரசும் இது தொடர்பாக கூடுதலாக எந்தவொரு உத்தரவுகளும் வெளியிடலாம். கல்வி ஆண்டு தொடங்கியதும், அனைத்து இளங்கலை, டிப்ளோமா மற்றும் பொறியியல் மாணவர்களுக்கும் இறுதி ஆண்டு தேர்வுகள் திட்டமிடப்படும். அதன் தேர்வுகளும் நடத்தப்படும் என பதிவு செய்து இருந்தார்.