‘குத்தாலத்தில் பரப்புரை’ திமுகவினரின் எதிர்ப்பை மீறி உதயநிதி கைது!

 

‘குத்தாலத்தில் பரப்புரை’ திமுகவினரின் எதிர்ப்பை மீறி உதயநிதி கைது!

குத்தாலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினை, தொண்டர்களின் எதிர்ப்பை மீறி போலீசார் கைது செய்தனர்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. மு.க ஸ்டாலின் நேரடி பிரச்சாரம் ஜனவரி மாதம் தொடங்கவிருக்கும் சூழலில், உதயநிதி ஸ்டாலின் தற்போது பரப்புரை செய்து வருகிறார். அரசின் உத்தரவை மீறி கடந்த 2 நாட்களாக பரப்புரை நடத்தி வரும் உதயநிதியை போலீசார் கைது செய்து வருகின்றனர். திருக்குவளையிலும், நாகை துறைமுகத்திலும் அவர் பிரச்சாரம் நடத்திய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். என்ன செய்தாலும், திமுகவின் பரப்புரை தொடரும் என உதயநிதி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

‘குத்தாலத்தில் பரப்புரை’ திமுகவினரின் எதிர்ப்பை மீறி உதயநிதி கைது!

இந்த நிலையில், மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் பரப்புரை செய்த உதயநிதியை போலீசார் கைது செய்தனர். திமுக தொண்டர்கள் கைது செய்ய விடாமல் தடுத்ததால் அங்கு போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இருப்பினும், உதயநிதியை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.