கொரானாவை ஒழிக்க ஒரே வழி தடுப்பூசி- உதயநிதி ஸ்டாலின்

 

கொரானாவை ஒழிக்க ஒரே வழி தடுப்பூசி- உதயநிதி ஸ்டாலின்

கொரானாவை ஒழிக்க ஒரே வழி தடுப்பூசி என்பதால் தமிழக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரானாவை ஒழிக்க ஒரே வழி தடுப்பூசி- உதயநிதி ஸ்டாலின்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும், ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் தடுப்பூசி முகாம் திட்டத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்வில் பேசிய உதயநிதி, “கொரனாவை ஒழிக்க ஒரே வழி தடுப்பூசி தான். குடும்பத்தினர், நண்பர்கள் தடுப்பூசி போட வலியுறுத்துங்கள். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். திரைத்துறையினர் பல கோரிக்கையை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.