ட்ரம்புக்கு ஏற்பட்ட கதி தான்… ஈபிஎஸ்-ஓபிஎஸ்க்கும் ஏற்படும்- உதயநிதி

 

ட்ரம்புக்கு ஏற்பட்ட கதி தான்… ஈபிஎஸ்-ஓபிஎஸ்க்கும் ஏற்படும்- உதயநிதி

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை அனல்பறக்க நடந்து வருகிறது. அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி களமிறங்கியுள்ள நிலையில் திமுக சார்பில் தேர்தல் பரப்புரையில் உதயநிதி, கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர். அத்துடன் திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் கிராம சபை என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டும், அதிமுக அரசின் குறைகளையும், ஊழல்களையும் மக்கள் மத்தியில் முன்வைத்து வருகிறார். அதேபோல் அவரது மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதியும், திமுக மகளிரணி செயலாளரான கனிமொழியும் விறுவிறு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

ட்ரம்புக்கு ஏற்பட்ட கதி தான்… ஈபிஎஸ்-ஓபிஎஸ்க்கும் ஏற்படும்- உதயநிதி

இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் வெறும் ட்ரைலர் தான், ஸ்டாலின் தான் மெயின் பிச்சர். ஸ்டாலின் ஒரு ஒரு தொகுதியாக சென்று மக்களின் கோரிக்கையை பெற்றுவருகிறார். சென்னையிலுள்ள 15 மேம்பாலங்களை கட்டியது ஸ்டாலின் தான். ட்ரம்ப் ஜெயிப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கடைசியாக அவர் தோற்றுவிட்டார். மோடியால் கை உயர்த்தப்பட்ட டிரம்ப்பின் கதி என்னவோ அதுதான் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கும் ஏற்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட்தேர்வு அடியோடு ரத்து செய்யப்படும். அதிமுக என்றுமே பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என ஜெயலலிதா கூறினார். ஆனால் இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எங்களுக்கு அம்மா இறந்துவிட்டதால் மோடியை டாடியாக ஏற்றுக்கொண்டோம் என கூறுகிறார் ” என பேசினார்.