எடப்பாடி தான் சசிகலாவுக்கு எதிராக பேசினார்- உதயநிதி ஸ்டாலின்

 

எடப்பாடி தான் சசிகலாவுக்கு எதிராக பேசினார்- உதயநிதி ஸ்டாலின்

பொள்ளாச்சி விவகாரத்தில் போராட்டம் நடத்த அதிமுக தனக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏன் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுகவினருக்கு பொங்கலை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எடப்பாடி தான் சசிகலாவுக்கு எதிராக பேசினார்- உதயநிதி ஸ்டாலின்

இதில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “சசிகலா குறித்து நான் தவறாக கூறவில்லை. சசிகலா குறித்து தவறாக கூறியவர்கள் அதிமுகவினர் தான். தன்னை சசிகலா தேர்ந்தெடுக்கவில்லை மக்கள்தான் தேர்ந்தெடுத்தார்கள் என்று சசிகலாவுக்கு எதிராக பேசியவர் எடப்பாடி பழனிசாமி. தன்னை பினாயல் என்று அதிமுகவினர் விமர்சனத்தை முன் வைக்கின்றனர். தான் பினாயில் என்றாலும் அதிமுக என்கிற சாக்கடையை சுத்தம் செய்யும் பயன்படும்” என்றும் கூறினார்