வெட்கமே இல்லாமல் மனித கடவுளே என 10 கோடி செலவில் சுய விளம்பரம்! விளாசும் உதயநிதி

 

வெட்கமே இல்லாமல் மனித கடவுளே என 10 கோடி செலவில் சுய விளம்பரம்! விளாசும் உதயநிதி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மோதிலால் குடும்பத்தினரை நேரில் சந்தித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கினார்.

வெட்கமே இல்லாமல் மனித கடவுளே என 10 கோடி செலவில் சுய விளம்பரம்! விளாசும் உதயநிதி

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த மூன்று வருடங்களில் 13 மாணவர்களை நீட் தேர்வுக்கு பலி கொடுத்துள்ளோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வை தமிழ் நாட்டில் அனுமதிக்கவில்லை. ஆனால் பாஜகவினர் தற்போது உள்ள அடிமைகளை வைத்து தமிழ் நாட்டில் நீட் புகுத்தி உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். எந்த ஒரு சட்ட போராட்டத்தையும் திமுக முன்னெடுக்க தயார்

அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்கு தனி வரைவு சட்டம் போட்டது போல நீட் தேர்வுக்கு தமிழகத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும். நீட் தேர்வால் தினமும் மாணவர்கள் தற்கொலை செய்து மாண்டு வரும் நிலையில், வெட்கமே இல்லாமல் மனித கடவுளே என்று அதிமுகவினர் 10 கோடி செலவில் சுய விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். விரைவில் இந்த ஓபிஎஸ் இபிஎஸ் அடிமைகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” எனக் கூறினார்.