இந்தியாவில் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உபர் நிறுவனம்

 

இந்தியாவில் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உபர் நிறுவனம்

டெல்லி: இந்தியாவில் 600 ஊழியர்களை உபர் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

கொரோனா பரவலால் உலகம் முழுக்க மிகப் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இதனால் தங்கள் நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கைகளை பல நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் கால் டாக்சி நிறுவனமான ஓலா தனது நிறுவனத்தில் இருந்து 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

இந்தியாவில் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உபர் நிறுவனம்

இந்நிலையில், மற்றொரு முன்னணி கால் டாக்சி நிறுவனமான உபரும் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது 600 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. வியாபாரத்தை மீட்டெடுப்பதற்கு பணியாளர்களின் அளவைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று உபெர் நிறுவனம் இந்த ஆட்குறைப்புக்கு காரணம் கூறியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டை உபர் நிறுவனம் வழங்கியுள்ளது.