கழக நிர்வாகிகள் சொன்னதை தான் கட்சி தலைமையிடம் தெரிவித்தேன்- உதயநிதி

 

கழக நிர்வாகிகள் சொன்னதை தான் கட்சி தலைமையிடம் தெரிவித்தேன்- உதயநிதி

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பகுதி திமுக நிர்வாகிகளுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசை வழங்குகினார்

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி கூட்டணியை அமைத்துள்ளார்.மதசார்பற்ற கூட்டணி தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார். பரப்புரைக்கு நான் செல்லும் இடங்களில் திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று
கழக நிர்வாகிகள் கூறினர். அதனையே நான் கட்சி தலைமையிடம் கூறினேன். எனவே, எங்கள்கூட்டணி ” எனக் கூறினார்.

கழக நிர்வாகிகள் சொன்னதை தான் கட்சி தலைமையிடம் தெரிவித்தேன்- உதயநிதி

முன்னதாக ஜெ.அன்பழகன் படத்திறப்பு விழா தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, “234 தொகுதியிலும் திமுக வெற்றி பெறும், திமுக வெற்றி உறுதியாகிய தொகுதிகளை கூட்டணிக்கு கொடுக்க வேண்டாம், திமுக அதிக அளவில் போட்டியிட வேண்டும் என தலைவரிடம் கூறினேன். தற்போதுள்ள சூழலில் 234 தொகுதியிலும் போட்டியிட்டால் 234 தொகுதியிலும் திமுக வெற்றி பெறும்” எனக் கூறினார்.