விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அழைத்துச் சென்று விபரீதம் செய்த இளைஞர்கள்!

 

விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அழைத்துச் சென்று விபரீதம் செய்த இளைஞர்கள்!

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் 10 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் அந்த சம்பவத்தை வீடியோவாகவும் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அழைத்துச் சென்று விபரீதம் செய்த இளைஞர்கள்!

விகாஸ் (19) மற்றும் விஷால் (21) என்ற இரு இளைஞர்கள் ஒரு சிறுவனுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து பின்னர் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். அதை வீடியோவாக எடுத்துவிட்டு வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

வீட்டிற்கு வந்த சிறுவன் நடந்த சம்பத்தை தனது தந்தையிடம் விவரித்துள்ளான்.
பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. POCSO சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஆகியவற்றின் கீழ் அந்த இளைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.