டீச்சரை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் -அடுத்து டீச்சர்கள் சேர்ந்து செய்த வேலை .

 

டீச்சரை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் -அடுத்து டீச்சர்கள் சேர்ந்து செய்த வேலை .


குடித்து விட்டு வந்த நபர் ,ஒரு டீச்சரை பலாத்காரம் செய்ய முயன்றதால் ,அவரை அங்கிருந்த டீச்சர்கள் அடித்து கொலை செய்தனர் .

டீச்சரை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் -அடுத்து டீச்சர்கள் சேர்ந்து செய்த வேலை .


உ.பி.யின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தின் எல்லைக்குள் இருக்கும் அக்பராபாத் கிராமத்தில் ஒரு தனியார் பள்ளியில் இரண்டு பெண் டீச்சர்கள் பணியாற்றி வந்தனர் ,அவர்கள் அங்குள்ள ஹாஸ்டலில் தங்கியிருந்தனர் .கடந்த சனிக்கிழமை இரவு 30 வயதான ஆணொருவர் நன்றாக குடித்து விட்டு அந்த டீச்சர்களிடம் தவறாக நடந்து அவர்களில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார் .அப்போது அந்த இரு பெண்களும் கூச்சலிட்டு கத்தியதும், அங்கிருந்த ஒரு ஆண் ஆசிரியர் விரைந்து வந்தார் .பிறகு மூவரும் சேர்ந்து அந்த நபரை கடுமையாக தாக்கினார்கள் .இந்த தாக்குதலில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார் .
பிறகு இறந்து போன நபரின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு கூட்டமாக திரண்டு வந்தனர் .அப்போது அந்த சம்பவத்தையும் அங்கு இறந்து கிடைக்கும் தங்களின் உறவினரையும் கொலை செய்த ஆசிரியர்களையும் வீடியோ எடுத்து போலீசில் புகார் கூறினர் .மேலும் அந்த வீடியோவை ஊடகத்திலும் வெளியிட்டனர் .பின்னர் போலீசார் விரைந்து வந்து கொலை செய்த இரண்டு பெண் டீச்சர் மற்றும் ஒரு ஆண் ஆகியோரை கைது செய்தனர் .அப்போது அந்த இறந்தவரின் உறவினர்கள் தங்களின் உறவினரை அந்த டீச்சர்தான் கூப்பிட்டார்கள் என்று கூறினர் .மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர் .