“டேய் அவன் கற்பழிக்கிறத படம் புடிங்கடா” -பெண்ணை காப்பாற்றாமல் படம் பிடித்த கொடுமை

 

“டேய் அவன் கற்பழிக்கிறத  படம் புடிங்கடா” -பெண்ணை காப்பாற்றாமல் படம் பிடித்த கொடுமை

பிளாட்பாரத்தில் வசித்த பெண்களை இரு குடிகாரர்கள் பலாத்காரம் செய்யும்போது அவர்களை  காப்பாற்றாமல், அதை படம் பிடித்தவர்களை போலீசார் கைது செய்தார்கள்.

“டேய் அவன் கற்பழிக்கிறத  படம் புடிங்கடா” -பெண்ணை காப்பாற்றாமல் படம் பிடித்த கொடுமை

டெல்லியின் சாலையோரம் ஒரு 35 வயதான பெண்ணும் அவரின் ஊனமுற்ற 18 வயதான மகளும்  வசித்து வந்தார்கள் .அந்த பெண்ணின் கணவர் அவர்களை கைவிட்டதால் அந்த இருவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்கள் .அவர்களுக்கு இருப்பிடம் இல்லாததால் டெல்லியின் பிளாட் பாரத்தில் வசித்து வந்தார்கள் .

இந்நிலையில் கடந்த டிசம்பர் 29 ம் தேதி  இரவு வஜீர்பூரில் வசிக்கும் அமித் மற்றும் ஜஹாங்கிர்புரியில் வசிக்கும் சோனு என்ற இருவரும் குடித்து விட்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தார்கள் .அப்போது அந்த சாலையோரம் தூங்கிக்கொண்டிருக்கும் இரு பெண்களையும் பார்த்தார்கள் .உடனே குடிவெறியில் காமவெறி இருவருக்கும் தலைக்கேறியது .உடனே அவர்கள் இருவரும் அந்த இரு பெண்களையும் கொலை செய்வதாக மிரட்டி பலாத்காரம் செய்தார்கள்  .அப்போது அந்த இரு பெண்களும் கூச்சல் போட்டார்கள் .அந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் வசித்த இரு வாலிபர்கள் ஓடி வந்தார்கள் .ஆனால் அந்த வாலிபர்கள் அவர்களை காப்பாற்றாமல் தங்களின் செல்போனில் அந்த கற்பழிப்பு  காட்சியை  படம் பிடித்த கொடுமை நடநதுள்ளது .அதன் பின்னர் அந்த வாலிபர்கள் அந்த பலாத்கார காட்சியை  சமூக ஊடகத்தில் வெளியிட்டார்கள் .அந்த காட்சி ஊடகத்தில் வைரலாகியது . அந்த பலாத்கார காட்சியை பார்த்த போலீசார் அந்த குற்றவாளிகளை கைது செய்தார்கள் . பிறகு போலீசார் விசாரணை நடத்தி அந்த காட்சியை படமாக்கிய வாலிபர்களையும் கைது செய்தார்கள் .பின்னர் பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் .

“டேய் அவன் கற்பழிக்கிறத  படம் புடிங்கடா” -பெண்ணை காப்பாற்றாமல் படம் பிடித்த கொடுமை