இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில், இருவர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில், இருவர் பலி!

திருப்பூர்

திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது ஈச்சர் வேன் மோதிய விபத்தில் பிரிண்டிங் நிறுவன ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.

திருப்பூர் அருகேயுள்ள பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் துணி பிரிண்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்றிரவு, கருப்பசாமி தன்னுடன் பணிபுரியும் அஜய், ராஜேஷ் ஆகியோருடன் ஊத்துக்குளி அடுத்த வெள்ளியம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில், இருவர் பலி!

சார்கார் பெரியபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கருப்பசாமி வாகனத்தின் மீது, எதிரே வந்த ஈச்சர் வேன் அதிவேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கருப்பசாமி, அஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ராஜேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.