பைக் மீது லாரி மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் பலி!

 

பைக் மீது லாரி மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் பலி!

திருச்சி

துறையூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் தனசேகரன் (19). இவர் துறையூர் அடுத்த கண்ணனூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று செமஸ்டர் தேர்வு தொடர்பாக, தனசேகரன், உடன் படிக்கும் அரவிந்த் மற்றும் சூர்யா ஆகியோருடன், இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.

பைக் மீது லாரி மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் பலி!

துறையூர் அடுத்த கண்ணனூர் பாளையம் பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது எதிரே ஆந்திராவில் இருந்து வந்த சரக்கு லாரி மோதியது. அப்போது, லாரி சக்கரம் ஏறியதில் தனசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். சூர்யா, அரவிந்த் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார், தனசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, ஆந்திராவை சேர்ந்த லாரி ஓட்டுநர் கோடிலிங்கதை கைது செய்தனர்.