இருசக்கர வாகனம் – கார் நேருக்கு நேர் மோதல்; காவலர் பலி!

 

இருசக்கர வாகனம் – கார் நேருக்கு நேர் மோதல்; காவலர் பலி!

தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள நகரம் பகுதியை சேர்ந்த சந்தனபாண்டி மகன் மாரிசாமி (27). இவர் சிவகிரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாரிசாமி பாதுகாப்பு பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் – கார் நேருக்கு நேர் மோதல்; காவலர் பலி!

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் பகுதியில் சென்றபோது மாரிசாமி வாகனத்தின் மீது, எதிரே தென்காசியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் கருப்பசாமி என்பவர் ஓட்டி வந்த கார் அதிவேகமாக மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மாரிசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை மாரிசாமி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.