தீயணைப்புத்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி!

 

தீயணைப்புத்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி!

மதுரை

மதுரையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தீயணைப்புத்துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. தீயணைப்புத்துறை ஏடிஜிபி சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், தீயணைப்புத்துறை வீரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தீயணைப்புத்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி!

உயர்நீதிமன்றம் மதுரைகிளை தீயணைப்பு நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, தல்லாகுளம் தீயணைப்பு நிலையதில் முடிந்தது. இந்த பேரணியின்போது, முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.