நெல்லையில் மர்மகும்பல் வெட்டியதில் 2 இளைஞர்கள் படுகாயம்!

 

நெல்லையில் மர்மகும்பல் வெட்டியதில் 2 இளைஞர்கள் படுகாயம்!

நெல்லை

நெல்லை மார்க்கெட் பகுதியில் உள்ள உணவகத்தில் புகுந்து மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கியதில் 2 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (22). கூலி தொழிலாளி. இவர் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் மார்க்கெட் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர், அருகில் உள்ள உணவகத்தில் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

நெல்லையில் மர்மகும்பல் வெட்டியதில் 2 இளைஞர்கள் படுகாயம்!

அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் ஹெல்மட் அணிந்து வந்த மர்மநபர்கள் உணவகத்தில் புகுந்த தங்கராஜ் மற்றும் ராஜ்குமாரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தீவிரமாக வருகின்றனர். நகரின் முக்கிய பகுதியில் இளைஞர்களை மர்மநபர்கள் வெட்டிய சம்பவம் பாளையங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.