தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவர் கைது!

 

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவர் கைது!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பக்கம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் அமிர்தம். இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது என்கிற தகவல்கள் நாளிதழ்களில் வெளியாகின. இதைத் தொடர்ந்து, 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் எழில், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் செய்தி சேகரிக்க சென்றுள்ளார். அப்போது, ஊராட்சி செயலாளர் சசிகுமார், அங்கு வந்து, செய்தியாளரை தடுத்து நிறுத்தி மிரட்டியுள்ளார்.தொடர்ந்து ஊராட்சி துணைத்தலைவரின் கணவர் விஜயகுமார் மற்றும் சிலர் செய்தியாளர் எழிலை தாக்கியதுடன் அலைபேசியை பறித்துக் கொண்டு ஊராட்சி அலுவலகத்தில் சிறைவைத்துள்ளனர்.
அதன்பின்னர், காவல்துறைக்கு தகவல் தெரிந்து செய்தியாளர் மீட்கப்பட்டார்.

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவர் கைது!

இந்நிலையில் பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்றவிடாமல் தடுத்தது, தனியார் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.