கல்யாணத்திற்கு போன பெண்கள் -பின் தொடர்ந்த ஆண்கள் -அடுத்து நடந்த விபரீதம் .

 

கல்யாணத்திற்கு போன பெண்கள் -பின் தொடர்ந்த ஆண்கள் -அடுத்து நடந்த விபரீதம் .

திருமண விழாவில் கலந்து கொள்ள சென்ற இரு டீனேஜ் பெண்களை பல வாலிபர்கள் தூக்கி சென்று பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது

கல்யாணத்திற்கு போன பெண்கள் -பின் தொடர்ந்த ஆண்கள் -அடுத்து நடந்த விபரீதம் .

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் இரு டீனேஜ் பெண்கள், தங்களின் பெற்றோருடன் வசித்து வந்தனர் .இந்நிலையில் அந்த ஊரை சேர்ந்த அவர்களின் தோழிக்கு கல்யாணம் நிச்சயமானது .அதனால் அந்த பெண் அந்த இரண்டு பெண்களையும் திருமணத்திற்கு கூப்பிட்டார் .அதனால் மே 12ம் தேதியன்று அந்த ஊரில் நடந்த அந்த திருமணத்திற்கு முதல் நாள் நடந்த ரிசெப்ஷனில் கலந்து கொள்ள இரவு நேரத்தில் இருவரும் சென்றனர் .

அப்போது அந்த பெண்களை சில ஆண்கள் தொடர்ந்து வந்தனர் .பிறகு அவர்கள் அந்த பெண்களை அங்குள்ள ஒரு மறைவான இடத்திற்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டனர் .அதன் பிறகு அந்த பெண்கள் இந்த விஷயத்தினை  அந்த ஊரில் உள்ள பஞ்சாயத்தில்  கூறினார் .ஆனால் அந்த பஞ்சாயத்தில் சரியான முறையில் நடவடிக்கை  எடுக்காமல் கால தாமதம் ஏற்படுத்தி வந்தனர் .இதனால் கோவப்பட்ட அந்த பெண்களின் பெற்றோர் இந்த பலாத்கார விஷயத்தை  அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினர்  .போலீசார் வழக்கு பதிந்து இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்