பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதல் – பெண் உள்பட இருவர் பலி!

 

பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதல் – பெண் உள்பட இருவர் பலி!

காஞ்சிபுரம்

ஶ்ரீபெரும்புதூர் அருகே சாலையோரம் பழுதாகி நின்ற காரின் மீது, லாரி மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் தமிழ்செல்வன். இவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் புறப்பட்டு வந்தார். தமிழ்செல்வனுடன், அவரது உறவினர்கள் பவானி (27) உள்ளிட்ட மூவர் உடன் வந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் வந்தபோது கார் திடீரென பழுதாகியது. இதனால் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு, தமிழ்செல்வன் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் பவானியும் நின்று கொண்டிருந்தார்.

பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதல் – பெண் உள்பட இருவர் பலி!

அப்போது, வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி ஒன்று, பழுதாகி நின்ற காரின் மீது அதிவேகமாக மோதியது. இதில், தமிழ்செல்வன் மற்றும் பவானி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த 2 பேர் லேசான காயமடைந்தனர்.

தகவல் அறிந்த ஶ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.