இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், ஐடிஐ மாணவர்கள் இருவர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், ஐடிஐ மாணவர்கள் இருவர் பலி!

தஞ்சாவூர்

திருவையாறு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஐடிஐ மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மணக்கரம்பை பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரது மகன் ஆனஸ்ட்ராஜ் (21). இவர் திருவையாறு கடுவெளி பகுதியில் உள்ள அரசு ஐ.டி.ஐ நிறுவனத்தில் 2ஆம் ஆண்டு எலெக்டீரீசியன் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இன்று செமஸ்டர் தேர்வு எழுதிவிட்டு ஆனஸ்ட்ராஜ் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், ஐடிஐ மாணவர்கள் இருவர் பலி!

அவருடன் தஞ்சை டவுன் கரம்பை பகுதியை சேர்ந்த விஜய்(21) என்ற மாணவரும் உடன் சென்றார். திருவையாறு அருகேயுள்ள அம்மன்பேட்டை கடைவீதி பகுதியில் சென்றபோது, தஞ்சையில் இருந்து திருவையாறு நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவையாறு டிஎஸ்பி சித்திரவேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..