தனிமைப்படுத்தப்பட்ட பெண் குளிக்கும்போது படம்பிடித்து மிரட்டிய 2 பேர் கைது !

 

தனிமைப்படுத்தப்பட்ட பெண் குளிக்கும்போது படம்பிடித்து மிரட்டிய 2 பேர் கைது !

மத்திய பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் கோவிட் -19 காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் தங்கியிருந்த ஒரு பெண் குளிக்கும்போது ஆபாசமாக வீடியோவை எடுத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் பெயர் சுனில் லடியா மற்றும் லக்ஷ்மன் லதியா என போலீசார் தெரிவித்தனர்.
சுனில் மற்றும் லக்ஷ்மன் இருவருக்கும் 20 வயது ஆகிறது. இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமையன்று கோவிட் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். அந்த பெண் மறுக்கவே அவர் குளிக்கும்போது ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். இதையடுத்து அந்த வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். சம்மதிக்காவிட்டால் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
புகார் அளித்த பெண் தாமோ மாவட்டத்தில் வசிப்பவர், இந்தூரிலிருந்து திரும்பியபோது சாகர் மாவட்டத்தில் குமார் படோலி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பெண் குளிக்கும்போது படம்பிடித்து மிரட்டிய 2 பேர் கைது !

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு வெளியே ஒரு தற்காலிக குளியலறையில் அந்தபெண் குளித்துக் கொண்டிருந்தபோது அந்த இருவரும் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் கிளிப்பை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதாக அச்சுறுத்தி உள்ளனர்.

இருவருக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், போலீசார் இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் மாறிவிட்டது. 8,000 க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 267 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.