இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திவந்த இருவர் கைது!

 

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திவந்த இருவர் கைது!

சென்னை

சென்னை திருமுல்லைவாயலில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திவந்த 2 நபர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சி.டி.ஹெச் சாலையில் நேற்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை மறித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திவந்த இருவர் கைது!

அப்போது, அவர்கள் உடைகளுக்குள் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் அளவிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த, போலீசார் இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், அவர்கள் அம்பத்தூரை சேர்ந்த கார் ஓட்டுநர் கார்த்திகேயன்(31) மற்றும் மெக்கானிக் கிரிதரன் (22) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களை நீதிமன்ற காவலில் அடைத்தனர்.