சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… தாத்தா உள்பட இருவர் போக்சோவில் கைது…

 

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… தாத்தா உள்பட இருவர் போக்சோவில் கைது…

சென்னை

சென்னையில் இருவேறு இடங்களில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, தன்னுடன் படித்து வரும் தோழியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது, தோழியின் தந்தை சசிகுமார்(44) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலின் பேரில் அவரது தந்தை, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சசிகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்த போலீசார் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… தாத்தா உள்பட இருவர் போக்சோவில் கைது…

இதேபோல், சென்னை எம்.கே.பி.நகரை சேர்ந்த 10 வயது சிறுமியை அவரது தயார் வியாசர்பாடியில் உள்ள தனது தந்தை ரகு என்கிற டேவிட் (60) வீட்டில் விட்டுசென்றுள்ளார். மறுநாள் வீட்டிற்சென்றபோது சிறுமி அழுது கொண்டிந்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது தாத்தா ரகு தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து, சிறுமியின் தாயார் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ரகுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்த போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.