சத்தியமங்கலத்தில் வீட்டில் சாராயம் காய்ச்சிய பெண் உள்பட இருவர் கைது!

 

சத்தியமங்கலத்தில் வீட்டில் சாராயம் காய்ச்சிய பெண் உள்பட இருவர் கைது!

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய பெண் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புதுவடவள்ளி அடுத்த ராஜீவ் நகரில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, ஒரு வீட்டின் முன்பு சாராயம் காச்சுவதற்காக பேரல் வைக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு ஒரு பெண் உள்பட 3 பேர் இருந்தனர். போலீசை கண்டதும் அதில் ஒருவர் தப்பி சென்றுவிட்டார்.

சத்தியமங்கலத்தில் வீட்டில் சாராயம் காய்ச்சிய பெண் உள்பட இருவர் கைது!

பிடிபட்ட பெண் உள்ளிட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மலர்க்கொடி(40), மகேந்திரன்(45) என தெரியவந்தது. மேலும் தப்பியோடியவர் கனகராஜ் என தெரியவந்தது. இதையடுத்து, மலர்கொடி வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், வீட்டில் சுமார் 50 லிட்டர் சாராயம் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மலர்கொடி, மகேந்திரனை கைது செய்தனர்.

மேலும், தப்பியோடிய கனகராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட 50 லிட்டர் சாராயமும் அழிக்கப்பட்டது. மலர்க்கொடி, மகேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.