டி.வி நடிகை சித்ரா மரணம்: மாமனார், மாமியாரிடம் ஆர்.டி.ஓ விசாரணை!

 

டி.வி நடிகை சித்ரா மரணம்: மாமனார், மாமியாரிடம் ஆர்.டி.ஓ விசாரணை!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது மாமனார் மற்றும் மாமியாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த 9ம் தேதி பிரபல சீரியல் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 2 மாதங்களுக்கு முன்னர் ஹேம்நாத் என்ற நபரை அவர் பதிவு திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் கொடுத்த அழுத்தத்தாலும் சித்ராவின் தாயார் கொடுத்த அழுத்தத்தாலும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் தன் மகளுடன் எந்த சண்டையும் இல்லை என தெரிவித்த சித்ராவின் தாயார், சித்ராவின் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் என தெரிவித்தார்.

டி.வி நடிகை சித்ரா மரணம்: மாமனார், மாமியாரிடம் ஆர்.டி.ஓ விசாரணை!

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், ஹேம்நாத் சித்ராவை சந்தேகப்பட்டதாகவும் ஷூட்டிங் நடக்கும் இடங்களில் சென்று குடித்துவிட்டு தகராறு செய்ததாகவும் தெரிய வந்தது. இதையடுத்து நசரத்பேட்டை போலீசார், 5 நாட்களுக்கு மேலாக ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஹேம்நாத் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிப்பதாக போலீசார் தெரிவித்த நிலையில், ‘நீ செத்து போ’ ‘இன்று எந்த நடிகர் கூட நடனம் ஆடினாய்’ போன்ற வார்த்தைகளால் திட்டி சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதால், நள்ளிரவு அவரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

டி.வி நடிகை சித்ரா மரணம்: மாமனார், மாமியாரிடம் ஆர்.டி.ஓ விசாரணை!

இதனிடையே விசாரணையை கையில் எடுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யா, நேற்று சித்ராவின் தாய் மற்றும் தந்தையிடமும் அவரது சகோதரியிடமும் விசாரணை நடத்தினார். இந்த நிலையில், தற்போது ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் மற்றும் தாய் வசந்தாவிடம் திவ்யா விசாரணை நடத்தி வருகிறார். இன்று ஹேம்நாத்திடம் ஆ.டி.ஓ விசாரணை நடக்கவிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.