தொலைக்காட்சி நடிகை மீது கொலை வெறியோடு பாய்ந்த தயாரிப்பாளர் -ஒரு தலை காதலால் வந்த விளைவு.

 

தொலைக்காட்சி நடிகை மீது கொலை வெறியோடு பாய்ந்த தயாரிப்பாளர் -ஒரு தலை காதலால் வந்த விளைவு.

மும்பையில் வசிக்கும் ஒரு தொலைக்காட்சி நடிகை ஒரு தயாரிப்பாளரின் திருமண ஆசையை நிராகரித்ததால் அந்த தயாரிப்பாளரால் கத்தியால் குத்தப்பட்டார் .

தொலைக்காட்சி நடிகை மீது கொலை வெறியோடு பாய்ந்த தயாரிப்பாளர் -ஒரு தலை காதலால் வந்த விளைவு.


மும்பையில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை மால்வி மல்ஹோத்ரா.இவரை பல தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்கும் யோகேஷ் மகிபால் சிங் என்ற தயாரிப்பாளர் காதலித்தார்
மேலும் அவர் அந்த நடிகையோடு 2019 ஆம் ஆண்டு முதல் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார் . இந்த ஆண்டு ஜனவரியில் நடிகை மல்ஹோத்ரா அந்த நபரை நேரில் சந்தித்தபோது அந்த தயாரிப்பாளர் அந்த நடிகையை காதலிப்பதாக கூறினார் .
அதை சற்றும் எதிர்பார்க்காத அந்த நடிகை மல்கொத்ரா அவரோடு பேசுவதையும் ஊடகத்தில் சாட் செய்வதையும் நிறுத்திக்கொண்டார் . மேலும் அந்த தயாரிப்பாளரோடு அனைத்து வகையான தகவல் தொடர்புகளையும் முறித்துக் கொண்டார்.
அதனால் கடும் கோபமுற்றார் அந்த தயாரிப்பாளர் யோகேஷ்.இதனால் திங்கள்கிழமை இரவு அந்தேரியின் வெர்சோவா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த நடிகையை வழிமறித்து , ‘எதனால் என்னோடு பேசுவதை நிறுத்திக்கொண்டாய்’ என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார் .பிறகு இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியது.அப்போது திடீரென அந்த யோகேஷ் கத்தியை எடுத்து அந்த நடிகையை பல இடங்களில் குத்தினார் .அதனால் படுகாயமுற்ற அவர் சிகிச்சைக்காக மும்பையின் கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

தொலைக்காட்சி நடிகை மீது கொலை வெறியோடு பாய்ந்த தயாரிப்பாளர் -ஒரு தலை காதலால் வந்த விளைவு.