“நீ உன்னை கொடுத்தா ,நான் மார்க் கொடுப்பேன்” – டியூஷன் வாத்தியார் பண்ண பலான வேலை

 

“நீ உன்னை கொடுத்தா ,நான் மார்க் கொடுப்பேன்” – டியூஷன் வாத்தியார் பண்ண பலான வேலை

ஒரு ஆசிரியரிடம் டியூஷனுக்கு வந்த பெண்ணை அந்த ஆசிரியர் தன்னுடைய நண்பரோடு சேர்ந்து பலாத்காரம் செய்து வீடியோவும் எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு 14 வயது பெண் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் .அவர் சரியாக படிக்காத காரணத்தால் அவரின் பள்ளி ஆசிரியரிடம் டியூஷனுக்கு போக முடிவு செய்தார் .அவரின் பெற்றோரிடம் அந்த ஆசிரியர் தங்களின் மகள் மிகவும் மோசமாக படிப்பதாகவும் ,இதே நிலை நீடித்தால் அவர் இந்த ஆண்டு பாஸ் ஆவது கடினம் என்றும் ,தன்னிடம் டியூஷனுக்கு அனுப்பினால் அவருக்கு பாடம் நடத்தி அதிக மார்க் வாங்க வைப்பதாக கூறினார் .
அவரின் பேச்சை நம்பிய அவரின் பெற்றோர் அவரிடம் தங்களின் மகளை ட்யுசனுக்கு அனுப்பினார்கள் .அவரிடம் சில நாட்களுக்கு முன்பு டியூஷனுக்கு வந்த அந்த பெண்ணை அந்த ஆசிரியர் ‘உன்னை எனக்கும் என் நண்பருக்கும் கொடுத்தால் தாங்கள் அதிக மார்க் போட்டு உன்னை பாஸ் செய்ய வைப்போமென்று ஆசை வார்த்தை கூறினார்கள் .ஆனால் அந்த மாணவி அதற்கு மறுத்துள்ளார் .பிறகு அந்த மாணவியை அவரும் அவரின் நண்பரும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர் .அதை அவர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர் .பிறகு இந்த விஷயத்தை வெளியே சொன்னால் சமூக ஊடகத்தில் இதை வெளியிடுவோமென்று மிரட்டியுள்ளார்கள் .
ஆனால் அந்த பெண் இந்த விஷயத்தினை தன் வீட்டில் சொல்லி டியூஷனுக்கு போகாமலிருந்துள்ளார் .இதனால் அந்த ஆசிரியர் மீதும் அவரின் நண்பர் மீதும் போலிஸில் புகாரளிக்கப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர் படுத்தியது .அவர்கள் ஏழு நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டார்கள் .

“நீ உன்னை கொடுத்தா ,நான் மார்க் கொடுப்பேன்” – டியூஷன் வாத்தியார் பண்ண பலான வேலை