“கணக்கு போடாம, கண்ட படத்தை போடறீங்களே சார் ” பாடம் நடத்தாமல் பலான படம் காமித்த ஆசிரியர் -படம் பார்த்த மாணவன் ஆசிரியர் மீது புகார்.
ஒரு ஆசிரியர் தன்னிடம் ட்யூஷன் படிக்க வந்த மாணவனுக்கு ,பாடம் நடத்தாமல் தினமும் பலான படத்தை காமித்துக்கொண்டிருந்ததால் கடுப்பான மாணவன் அவர் மீது போலிஸில் புகார் கொடுத்தான்.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பாரா பகுதியில் ஒரு 10 வயது மாணவன் தினமும் ட்யூஷன் படிக்க செல்வான் .அப்படி வந்த சிறுவன் டுயூஷன் போன போது அவரின் ஆசிரியர் அந்த சிறுவனுக்கு அவரின் செல்போனில் சிறுவர் ஆபாச படங்களை காமித்துள்ளார் .அந்த படத்தை பார்த்த அந்த சிறுவன் அதிர்ச்சியடைந்தான் .
பிறகு ட்யூசன் முடிந்து வீட்டுக்கு வந்ததும், ட்யூஷன் ஆசிரியர் ஆபாச படத்தினை செல்போனில் காமித்ததை அவரின் பெற்றோரிடம் கூறினான் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவனின் பெற்றோர் ,அந்த பத்து வயது சிறுவானை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு சென்று அந்த ஆசிரியர் மீது புகாரளித்தார்கள் .
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் உடனே அந்த ஆசிரியரின் வீட்டுக்கு சென்று, அவரின் செல்போனை பறிமுதல் செய்து ஆராய்ந்தபோது, அதற்குள் நிறைய ஆபாசப்படங்கள் டவுன்லோடு செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர் .பிறகு அந்த ஆசிரியரை பாலியல் வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .