குளத்தில் மீன்பிடித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி

 

குளத்தில் மீன்பிடித்த  இளைஞர் நீரில் மூழ்கி பலி

தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே குளத்தில் மீன்பிடித்தபோது சகதியில் சிக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பிரகாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோன்ஸ்ரகு. இவர் தட்டார்மடம் அருகேயுள்ள தருவைக்குளத்திற்கு சென்று மீன்பிடித்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று வழக்கம்போல் ஜோன்ஸ்ரகு மற்றும் அவரது தந்தை ஆகியோர் குளத்தில் இறங்கி மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குளத்தில் மீன்பிடித்த  இளைஞர் நீரில் மூழ்கி பலி

அப்போது, எதிர்பாராத விதமாக ஜோன்ஸ்ரகு சகதியில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் நீரில் தத்தளித்தார். தொடர்ந்து அவர் நீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனடியாக தீயணைப்பு நிலையைத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் இறங்கி தேடியபோது ஜோன்ஸ்ரகு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தந்தையின் கண்முன்னே மகன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.