சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரருக்கு டி.டி.வி.தினகரன் இரங்கல்
சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரருக்கு டி.டி.வி.தினகரன் இரங்கல்
சீன ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
எல்லையில் நேற்று இரவு இந்திய – சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியத் தரப்பில் மூன்று பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் ஐந்து பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
சீன ராணுவத்தின் கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ ஹவில்தார் திரு.பழனி உள்ளிட்ட மூன்று பேருக்கும் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன். 1/2
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 16, 2020
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உயிரிழந்தார். அவருக்கு இரங்கல் தெரிவித்து டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், “சீன ராணுவத்தின் கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ ஹவில்தார் பழனி உள்ளிட்ட மூன்று பேருக்கும் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பழனியின் தியாகத்திற்குத் தலை வணங்குவோம்” என்று கூறியுள்ளார்.