“ஓபிஎஸ் – ஈபிஎஸ் சசிகலா விடுதலையை கொண்டாடுகிறார்கள்” – டிடிவி தினகரன்

 

“ஓபிஎஸ் – ஈபிஎஸ் சசிகலா விடுதலையை கொண்டாடுகிறார்கள்” – டிடிவி தினகரன்

மருத்துவர்களின் அறிவுரைப்படி சசிகலாவை தமிழகம் அழைத்து வருவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

“ஓபிஎஸ் – ஈபிஎஸ் சசிகலா விடுதலையை கொண்டாடுகிறார்கள்” – டிடிவி தினகரன்

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலிருந்து சசிகலா தற்போது விடுதலையாகியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு சிறைக்கு சென்ற சசிகலா, பெங்களூரு சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விடுதலையாகியுள்ளார். கொரோனா காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை சிறைத்துறையினர் இன்று நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நடைமுறைகளை முடித்து விடுதலை செய்தனர். இருப்பினும் கொரோனா காரணமாக அவர் சிகிச்சை முடிந்த பிறகே தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சசிகலா விடுதலையையொட்டி அமமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

“ஓபிஎஸ் – ஈபிஎஸ் சசிகலா விடுதலையை கொண்டாடுகிறார்கள்” – டிடிவி தினகரன்

இந்நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சசிகலா அதிகாரபூர்வமாக விடுதலையாகிவிட்டார். தமிழக மக்கள் சின்னம்மாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். மருத்துவர்களின் அறிவுரைப்படி சின்னம்மாவை தமிழகம் அழைத்து வருவோம் என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம், “சசிகலா விடுதலையன்று ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சின்னம்மாவின் வருகையை சென்னையிலும் கொண்டாடுகிறார்கள். என்றார். அத்துடன் அதிமுக – அமமுக இணையுமா என்ற ககேள்விக்கு பதிலளிக்க மறுத்த டிடிவி தினகரன், அரசியல் பற்றி பேச விரும்பவில்லை என்றார்.