“நாட்டை விட்டு ஓட போகிறார் எடப்பாடி பழனிசாமி” : டிடிவி தினகரன் பேச்சு!!

 

“நாட்டை விட்டு ஓட போகிறார் எடப்பாடி பழனிசாமி” : டிடிவி தினகரன் பேச்சு!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் திமுகவை கடுமையாக சாடினார்.

“நாட்டை விட்டு ஓட போகிறார் எடப்பாடி பழனிசாமி” : டிடிவி தினகரன் பேச்சு!!

அதில்,” திமுக அலை வீசுவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறுகிறார் .ஆனால் சுனாமி பேரலை தான் வீசுகிறது. அவர் வாயாலே கெட்டவர். திமுகவுக்கு வாக்களித்தால் பிரியாணி கடை மட்டுமல்ல ,டீக்கடை, பஜ்ஜி கடை, எங்கும் தொழில் செய்ய முடியாது. தமிழக மீனவர்கள் சிறையில் வாழ்வதற்கு திமுகதான் காரணம். நீட் தமிழகத்திற்கு வந்தது திமுகதான் காரணம். காவிரி பிரச்சினை மீத்தேன் திட்டம் என அனைத்திற்கும் காரணம் திமுகதான். இலங்கை படுகொலைக்கு காரணம் காங்கிரஸ் கட்சி .விடுதலைப்புலிகளை கொள்ள ஆயுதங்களை வழங்கியது காங்கிரஸ். அதனோடு கூட்டணி வைத்துள்ள திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் நிலைமை என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள் .திமுக ஆட்சிக்கு வந்தால் கடை உரிமையாளர்கள் கல்லாப்பெட்டியில் இருக்கமுடியாது. திமுகவினர் தான் கல்லாப்பெட்டியில் இருப்பார்கள். அந்த அளவுக்கு கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம் பெருகிவிடும். நாட்டை விட்டுப் போகிற பழனிசாமி பற்றி பேசுவதற்கு ஒன்றுமே கிடையாது. வெற்றி நடை போடும் தமிழகம் என்று கூறுகிறார். ஆனால் அவர் 5 லட்சம் கோடி கடனில் தமிழகத்தை தள்ளியுள்ளார்” என்றார்.

“நாட்டை விட்டு ஓட போகிறார் எடப்பாடி பழனிசாமி” : டிடிவி தினகரன் பேச்சு!!

தொடர்ந்து பேசிய அவர் ,”ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு உள்ளிட்ட எந்த சம்பவத்திற்கும் பிரதமர் மோடி அனுதாபம் தெரிவிக்கவில்லை. பிரதமருக்கு தமிழக மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. தமிழக மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுவதில்லை. அதனால்தான் அனுதாபம் தெரிவிப்பது இல்லை. சிறுபான்மை மக்கள் திமுகவை நம்பாதீர்கள். இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று விட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் .திமுகவுக்கு வாக்களித்தால் நமது உடமைகள் எதுவுமே மிஞ்சாது ; அகதிகளாக தான் நாம் வாழ வேண்டும். ஆர் கே நகரில் கொடுத்து மக்களை ஏமாற்றினார் என்று கூறுவது கட்டுக்கதை” என்றார்.