இதுவரை டெல்லி உதவியால் தான் பழனிசாமி ஆட்சி தப்பித்தது- டிடிவி தினகரன்

 

இதுவரை டெல்லி உதவியால் தான் பழனிசாமி ஆட்சி தப்பித்தது- டிடிவி தினகரன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சரத்தின்போது பேசிய டிடிவி தினகர்ன, “யாராவது டோக்கன் வாங்கிட்டு அரசியல்வாதியை நம்பி ஓட்டு போடுவார்களா?, கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். இரட்டை இலை யாரிடமிருந்தால் நல்லது என உங்களுக்கு தெரியும், துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். கோவில்பட்டி தொகுதி மக்கள் அனைத்து வசதிகளும் பெற்று வாழ குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். கோவில்பட்டி மட்டுமல்ல தமிழகம் முழுக்க ஒரு மாற்றத்தை உருவாக்க அமமுகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

இதுவரை டெல்லி உதவியால் தான் பழனிசாமி ஆட்சி தப்பித்தது- டிடிவி தினகரன்

சுகாதாரமான குடிநீர், சாலை வசதி, சுகாதார மேம்பாடு கிடைக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கள். தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன் இருப்போம். நீங்கள் என்னை தான் வெற்றி பெறச் செய்வீர்கள் ஆனால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாரந்தோறும் கோவில்பட்டிக்கு வந்து மக்களின் குறைகளை கேட்டறிவேன். எனது மகளின் திருமணம் முடிந்தபிறகு கோவில்பட்டியிலேயே வீடு எடுத்து தங்கிவிடுவேன். காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.அரசு பள்ளி தரம் உயர்த்தப்படும், கல்லூரி அமைக்கப்படும், குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும்” என தெரிவித்தார்.