‘உண்மையான தர்ம யுத்தம் இப்போது தான் தொடங்குகிறது’ – டிடிவி தினகரன் சூசகம்!

 

‘உண்மையான தர்ம யுத்தம் இப்போது தான் தொடங்குகிறது’ – டிடிவி தினகரன் சூசகம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணியில் அதிமுக, திமுக அதிரடியாக களமிறங்கியுள்ளன. திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டுமென பாஜகவுடன் கைகோர்த்து அதிமுக களமிறங்கியிருக்கும் நிலையில், அதிமுகவையும் சேர்த்து ஒழித்துக் கட்ட அமமுக களமிறங்கியிருக்கிறது.

‘உண்மையான தர்ம யுத்தம் இப்போது தான் தொடங்குகிறது’ – டிடிவி தினகரன் சூசகம்!

இந்த தேர்தலில் சசிகலா அமமுக பக்கம் நின்று அதிமுகவின் வாக்குகளை சிதறடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியலில் இருந்து விலகி டிடிவி தினகரன் உட்பட அனைவர்க்கும் ஷாக் கொடுத்தார் சசிகலா. இருந்தாலும், சசிகலா இல்லாமலேயே தேர்தலை சந்திப்போம் என டிடிவி தினகரனும் அவரது ஆதரவாளர்களும் மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

‘உண்மையான தர்ம யுத்தம் இப்போது தான் தொடங்குகிறது’ – டிடிவி தினகரன் சூசகம்!

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், மற்ற கட்சி பற்றி பேச விரும்பவில்லை. நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறோம். அமமுக எம்.எல்ஏக்களுக்கு அதிமுக சீட் தருவதாக கூறப்படுவது எல்லாம் பொய், வதந்தி. டெல்டா பகுதிகளில் முக்கியமான நபர் ஒருவர் வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

மேலும், உண்மையான தர்ம யுத்தம் இப்போது தான் தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்த அவர், பாண்டவர்கள் ஆகிய நாங்கள் துரியோதனன் கூட்டத்தையும் தீய சக்தி கூட்டத்தையும் எதிர்த்து தர்மத்தை நிலைநாட்ட போரிடுகிறோம் என்றும் கூட்டணி கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.