மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைக்க தயார் என கருத்து தெரிவித்த முனுசாமிக்கு டிடிவி தினகரன் பதில்

 

மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைக்க தயார் என கருத்து தெரிவித்த முனுசாமிக்கு டிடிவி தினகரன் பதில்

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கேபி முனுசாமி, “கட்சியில் இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது. அமமுக அதிமுக இணைவதற்கு வாய்ப்பு இல்லை. வேண்டும் என்றால் டிடிவி தினகரன் அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஓப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்து தன்னை அதிமுகவில் இணைக்ககோரினால் அதற்கு அதிமுக தலைமை அக்கடிதம் தொடர்பாக பரிசீலனை செய்யும்” எனக் கூறினார்.

மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைக்க தயார் என கருத்து தெரிவித்த முனுசாமிக்கு டிடிவி தினகரன் பதில்

இந்நிலையில் மதுரை திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிடிவி தினகரன் , “யார் தவறு செய்தவர்கள், யார் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள், யார் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை எல்லாம் தொண்டர்களும், தமிழக மக்களும் முடிவு செய்ய வேண்டும். இதனையெல்லாம் காலம் பதில் சொல்லும். தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த சசிகலா வருவார்கள்.ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. பொதுக்குழுவைக் கூட்டவும், தேர்தலை நடத்தவும், ஒருவருக்குப் பதவி கொடுக்கவும், நீக்கவும் அதிகாரம் படைத்தவர் பொதுச் செயலாளர். ஆதலால் அவர் அதிமுக கொடியை பயன்படுத்துவதற்கு முழு உரிமையும் உண்டு” எனக் கூறினார்.