பொது வெளியில் தலைக்காட்டாத டிடிவி தினகரன்! சசிகலாவின் மாஸ்டர் பிளான்…

 

பொது வெளியில் தலைக்காட்டாத டிடிவி தினகரன்! சசிகலாவின் மாஸ்டர் பிளான்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடந்த சில நாட்களாக பொதுவெளியில் காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக அவரது கட்சியிலேயே சிலர் கூறுகின்றனர். அவர் வெளியில் வருவதற்கான காரணங்கள் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகிவரும் சூழலில், டிடிவி தினகரன் அது தொடர்பான எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. டிடிவி தினகரன் முன்பைப் போல தற்போது யாரிடமும் அவ்வளவாக பேசுவதில்லை எனவும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு ஏன் அவர் சென்னையிலேயே இல்லை என்றும் கூறப்படுகிறது. பாண்டிச்சேரியில் உள்ள தனது பண்ணை வீட்டில் யாரிடமும் தொடர்பு கொள்ளாமல் அவர் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. சசிகலா யாரிடமும் பேசக்கூடாது என தினகரனுக்கு கட்டளையிட்டதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

பொது வெளியில் தலைக்காட்டாத டிடிவி தினகரன்! சசிகலாவின் மாஸ்டர் பிளான்…

கொரோனாவுக்கு முன்புவரை ஆளுங்கட்சியின் குறைகளை பொதுவெளியில் சுட்டிக் காட்டிக்கொண்டிருந்த டிடிவி தினகரன் கடந்த 8 மாதங்களாக பொதுவெளியில் தலைகாட்டாமல் இருக்கிறார். சில முக்கிய நிகழ்வுகளுக்கு அறிக்கையையும், வாழ்த்துக்களையும், இரங்கலையும் மட்டும் ட்விட்டரில் தெரிவித்துவரும் டிடிவி தினகரன், பொது நிகழ்ச்சிகளுக்கோ, செய்தியாளர்கள் மத்தியிலோ தென்படவில்லை. சசிகலாவின் நகர்வுகள் பாதிக்க கூடாது என்பதால் அவர் தினகரனை அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார் என மன்னார்குடி வட்டாரங்கள் முனுமுனுக்கின்றனர்.