மகள் திருமணத்தில் கலந்துகொண்ட முதல்வர் உட்பட அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ள ஏஆர் ரஹ்மான்!

 
மகள் திருமணத்தில் கலந்துகொண்ட முதல்வர் உட்பட அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ள ஏஆர் ரஹ்மான்! மகள் திருமணத்தில் கலந்துகொண்ட முதல்வர் உட்பட அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ள ஏஆர் ரஹ்மான்!

மகளின் திருமணத்திற்கு வருகை புரிந்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மான் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சமீபத்தில் இசையமைப்பாளர் மகள் கதீஜா ரஹ்மானுக்கு  ரியாஸ்தீன் ஷேக் முகமது என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.

அதையடுத்து ஜூன் 10-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பது. அதில் பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

மகள் திருமணத்தில் கலந்துகொண்ட முதல்வர் உட்பட அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ள ஏஆர் ரஹ்மான்!

திருமண வரவேற்பில் இயக்குனர் மணிரத்னம், சுகாசினி மணிரத்னம், ஜீவி பிரகாஷ், நடிகை அம்பிகா, நடிகர் ரகுமான், சித்தார்த், அதிதி ராவ் ஹைதாரி, பிரசாந்த், தியாகராஜன், பாடகி ஜோனிடா காந்தி, நடிகர் ஜீவா, எஸ் ஜே சூர்யா, ஷாலினி அஜீத், ஷாமிலி, அநௌஷ்கா அஜித், யுவன் சங்கர் ராஜா, தேவா நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் குடும்பத்தினர், நடிகர் பார்த்திபன், திவ்யதர்ஷினி என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

மகள் திருமணத்தில் கலந்துகொண்ட முதல்வர் உட்பட அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ள ஏஆர் ரஹ்மான்!

 தற்போது மகள் திருமணத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஆர் ரகுமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"எனது அன்பு மகள் கதீஜா ரஹ்மான் ரியாஸ்தீன் ஷேக் முகமது திருமணத்தி கலந்துகொண்ட அனைவர்க்கும் நன்றி. எங்களின் சிறப்பு எங்களோடு இணைந்த அனைவருக்கும், குறிப்பாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு எனது அன்பான வணக்கங்கள். உங்கள் ஆசீர்வாதங்கள் இந்த நிகழ்வை ஒரு அழகான நிகழ்வாக மட்டுமல்லாமல், மறக்கமுடியாத ஒன்றாகவும் ஆக்கியது, நாங்கள் வாழும் வரை மற்றும் வாழ்க்கையை கொண்டாடும் வரை எங்கள் இதயங்களில் அன்பாக வைத்திருப்போம்.

மகள் திருமணத்தில் கலந்துகொண்ட முதல்வர் உட்பட அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ள ஏஆர் ரஹ்மான்!
குறிப்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டாலின் அவர்களே, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டக் காவல் துறை, சென்னை போக்குவரத்துக் காவல் பிரிவு, திருவள்ளூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கும்மிடிப்பூண்டி தாலுக்கா தீயணைப்பு மீட்புத் துறை, அனைத்து அரசு அலுவலர்கள், பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், கேட்டனமல்லி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அனைத்து அன்பான கிராம மக்களின் நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு.
உங்களின் அன்பினாலும், அன்பினாலும் நாங்கள் வியப்படைகிறோம். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக!" என்று தெரிவித்துள்ளார்.