8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

 

8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவுடி விகாஸ் துபேவை பிடிக்க நடந்த தேடுதல் வேட்டையின்போது போலீசார் மீது ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறை தரப்பில் மேலும் சிலர் காயம் என தகவல் வெளியாகியது. இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று காலையில் மத்திய பிரதேசம் உஜ்ஜைன் நகரில் உள்ள பிரபல மஹாகால பைரவர் கோயிலுக்கு வந்த விகாஸ் துபேவை அந்த கோயிலின் பாதுகாவலர் சாமர்த்தியமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளானதாகவும், அப்போது விபத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற விகாஸ் துபேவை என்கவுன்டரில் போலீஸ் சுட்டுக்கொன்றதாகவும்  தெரிகிறது.