காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு! ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி!!

 

காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு! ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுங்கந்தாங்கள் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தண்டமாணி(46), வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. கே.வி.குப்பம் காவல் துறையினர் தன் மீது போலி வழக்கு போடுவதாக கூறி மிரட்டுவதால் தண்டமாணி தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.

காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு! ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி!!

குடும்ப பிரச்சனை காரணமாக புகார் அளிக்க சென்றால் காவல் துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் தண்டமாணி குற்றஞ்சாட்டினார். மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தண்டபாணியை சத்துவாச்சாரி காவல் துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.