அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி ஓட்டுநர் பலி!

 

அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி ஓட்டுநர் பலி!

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

சென்னையை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சங்கர். இவர் நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு லாரியில் சரக்கு ஏற்றிகொண்டு சென்று கொண்டிருந்தார். பெரம்பலூர் மாவட்டம் இரூர் அருகே பொருட்கள் வாங்க லாரியை நிறுத்திய அவர், சாலையின் எதிர்புறம் உள்ள கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி ஓட்டுநர் பலி!

பின்னர், லாரிக்கு திரும்ப சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று, சங்கர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.