ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – ஓட்டுநர் உள்பட 3 பேர் பலி!

 

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – ஓட்டுநர் உள்பட 3 பேர் பலி!

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே லாரியை முந்திச்செல்ல முயன்ற ஆட்டோ லாரியில் சிக்கி விபத்திற்கு உள்ளானதில் ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி ஆலத்தூர் இந்தியன் வங்கி அருகே இன்று மதியம் கள்ளக்குறிச்சியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சங்கராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, லாரியை முந்தி செல்ல முயன்றது.

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – ஓட்டுநர் உள்பட 3 பேர் பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக லாரியின் முன்புறம் மோதிய ஆட்டோ, அதன் சக்கரத்தில் சிக்கி பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (35), ஆட்டோவில் பயணம் செய்த சரவணன், ராஜேந்திரன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குறிப்பாக லாரி சக்கரத்தில் சிக்கிய மணிகண்டனின் உடல் துண்டு துண்டாக சிதறியது.

விபத்து குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார், மூவரது உடலையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.