திருநின்றவூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – அண்ணன், தங்கை பலி

 

திருநின்றவூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – அண்ணன், தங்கை பலி

திருவள்ளூர்

திருநின்றவூர் அருகே இருசக்கர வாகனம் மீது சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் அண்ணன், தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நந்தம்பேடு பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் வெங்கடேசன்(20). இவரது தங்கை கவுசல்யா(18). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பெரியபாளையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். திருநின்றவூர் காவல் நிலையம் அருகே சாலை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த சிமெண்ட் லாரி ஒன்று, இருசக்கர வாகனம் மோதியது. இதில், படுகாயம் அடைந்த வெங்கடேசன் மற்றும் கவுசல்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருநின்றவூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – அண்ணன், தங்கை பலி

இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இதனிடையே, திருநின்றவூர் பகுதியில் கால்நடைகள் சாலையில் நடமாடுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், சாலை சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.